
புதுடெல்லி: ஐஆர்சிடிசி தளத்தில் ஆதார் எண்ணை பதிவு செய்த பயணிகள் மட்டுமே முதல் 15 நிமிடங்கள் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும். தினமும் அதிகாலை 12.20 மணி முதல் இரவு 11.45 மணி வரை ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். தட்கல் டிக்கெட்டுகளை பொறுத்தவரை ஏசி பெட்டிகளுக்கு காலை 10 மணிக்கும், ஏசி அல்லாத பெட்டிகளுக்கு காலை 11 மணிக்கும் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.
கடந்த ஜூலையில் தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டது. இதன்மூலம் தட்கல் ரயில் டிக்கெட்டில் முறைகேடுகள் தடுக்கப்பட்டு உள்ளன. தற்போது 60 நாட்களுக்கு முன்பாக சாதாரண ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் நடைமுறை அமலில் உள்ளது.