
புதுடெல்லி: இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், டெல்லி, உத்தராகண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தின் மண்டி மாவட்டம் தரம்பூர் நகரில் நேற்று முன்தினம் இரவு மேகவெடிப்பு காரணமாக தொடங்கிய கனமழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. இதனால் தரம்பூர் பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது. சில பேருந்துகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. பல பேருந்துகள், கடைகள், நீரேற்று நிலையம் உள்ளிட்டவை சேதமடைந்தன.