• September 17, 2025
  • NewsEditor
  • 0

கரூர்: கரூரில் இன்று (செப்​.17) நடை​பெறும் திமுக முப்​பெரும் விழா​வில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பங்​கேற்​று, விருதுகள், பரிசுகள் வழங்கி சிறப்​புரை​யாற்​றுகிறார். கரூர் கோடங்​கிப்​பட்​டி​யில் இன்று மாலை 5 மணிக்கு திமுக முப்​பெரும் விழா தொடங்​கு​கிறது. முன்​னாள் அமைச்​சரும், திமுக கரூர் மாவட்​டச் செய​லா​ள​ரு​மான வி.செந்​தில்​பாலாஜி வரவேற்​கிறார். பொதுச் செய​லா​ள​ரும், அமைச்​சரு​மான துரை​முரு​கன் தலைமை வகிக்​கிறார்.

தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், விருதுகள் மற்​றும் பரிசுகள் வழங்கி சிறப்​புரை​யாற்​றுகிறார். கட்​சிப் பொருளாளர் டி.ஆர்​.​பாலு, முதன்​மைச் செய​லா​ள​ரும், அமைச்​சரு​மான கே.என்​. நேரு, துணை பொதுச் செய​லா​ளர்​கள் ஐ.பெரிய​சாமி, திருச்சி சிவா, ஆ.ரா​சா, கனி​மொழி, அந்​தி​யூர் ப.செல்​வ​ராஜ் ஆகியோர் வாழ்த்​துரை வழங்​கு​கின்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *