
புவனேஸ்வர்: ஒடிசாவில், தனது காலை தொட்டு வணங்காததால் மாணவர்களை அடித்த ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டம், பெட்னோட்டி ஒன்றியம் கண்டதேயுலா என்ற கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது.
இப்பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை காலை இறைவணக்க கூட்டத்துக்கு பிறகு மாணவர்கள் தங்கள் வகுப்பறைகளுக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் இப்பள்ளியின் ஆசிரியை ஒருவர் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பறைகளுக்கு சென்று, பிரார்த்தனைக்கு பிறகு தனது காலை ஏன் தொட்டு