
சென்னை: ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து 6 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதத்தில் ஆயுதபூஜை, விஜயதசமி, தீபாவளி பண்டிகை ஆகியவை அடுத்தடுத்து வர உள்ளன. இதை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் பயணிகள் வசதிக்காக 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து செப்.25, அக்.2, 9, 16, 23 ஆகிய தேதிகளில் இரவு 11.50 மணிக்கு அதிவிரைவு வாராந்திர சிறப்பு ரயில் (06123) புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு போத்தனூரை சென்றடையும். மறுமார்க்கமாக, போத்தனூரில் இருந்து செப்.26, அக்.3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் மாலை 6.30 மணிக்கு சிறப்பு ரயில் (06124) புறப்பட்டு, மறுநாள்அதிகாலை 3.15 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்து அடையும்.