• September 17, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஆ​யுத​பூஜை, தீபாவளி பண்​டிகையை முன்​னிட்​டு, சென்​னை​யில் இருந்து 6 சிறப்பு ரயில்​கள் அறிவிக்​கப்​பட்​டுள்​ளன. அடுத்த மாதத்​தில் ஆயுத​பூஜை, விஜயதசமி, தீபாவளி பண்​டிகை ஆகியவை அடுத்​தடுத்து வர உள்​ளன. இதை முன்​னிட்​டு, சென்​னை​யில் இருந்து சொந்த ஊர்​களுக்கு சென்று திரும்​பும் பயணி​கள் வசதிக்​காக 6 சிறப்பு ரயில்​கள் இயக்​கப்பட உள்​ளன.

அதன்​படி, சென்னை சென்ட்​ரலில் இருந்து செப்​.25, அக்​.2, 9, 16, 23 ஆகிய தேதி​களில் இரவு 11.50 மணிக்கு அதி​விரைவு வாராந்​திர சிறப்பு ரயில் (06123) புறப்​பட்​டு, மறு​நாள் காலை 8.30 மணிக்கு போத்​தனூரை சென்​றடை​யும். மறு​மார்க்​க​மாக, போத்​தனூரில் இருந்து செப்​.26, அக்​.3, 10, 17, 24 ஆகிய தேதி​களில் மாலை 6.30 மணிக்கு சிறப்பு ரயில் (06124) புறப்​பட்​டு, மறு​நாள்அதி​காலை 3.15 மணிக்கு சென்னை சென்ட்​ரலை வந்​து அடை​யும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *