
சென்னை: மாற்றுத் திறனாளியான வைஷ்ணவி ஜெயக்குமார் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின்போது மாற்றுத் திறனாளிகள் வாக்குச்சாவடிகளை எளிதில் அணுகி வாக்களிக்கும் வகையில் தேவையான வசதிகளை சட்டப்பூர்வமாக செய்து கொடுக்கவும், வசதிகள் செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்யவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.