
பெங்களூரு: கர்நாடக மாநிலம் மாலூர் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ நஞ்சே கவுடா கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வென்றது செல்லாது, அந்த தேர்தலில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கோலார் மாவட்டம், மாலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நஞ்சே கவுடாவுக்கும், பாஜக வேட்பாளர் மஞ்சுநாத் கவுடாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இருவரும் இறுதிச்சுற்று வாக்கு எண்ணிக்கை வரை மாறி மாறி முன்னிலை வகித்தனர்.