
அரூர்: இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் (பி.வி.கே அணி) பி.வி.கரியமால் (98) உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள பாப்பிசெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பி.வி.கரியமாலுக்கு 2 மகன், 3 மகள்கள் உள்ளனர். மனைவி மற்றும் ஒரு மகன் இறந்து விட்டனர்.
சிறு வயதில் இருந்தே பட்டியலின மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்திய இவர், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக பாடுபட்டவர்.