
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து மண்டலங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் உபகரணங்கள் சரிபார்ப்பு பணிகளை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையை முன் னிட்டு, மழைக் காலத்தில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ள ஜேசிபி உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்கள், இயந்திரங்கள், உபகரணங்கள் ஆகியவற்றை சரிபார்த்து தயார்படுத்தும் பணிகள், அனைத்து மண்டலங்களிலும் நேற்று மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் உரிய பொறுப்பு அலுவலர்களின் வாயிலாக கண்காணிக்கப்பட்டது.