• September 16, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: புதிதாக பொறுப்பேற்றுள்ள குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் இன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

குடியரசு துணைத் தலைவராக தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் சமீபத்தில் பொறுப்பேற்றார். இந்த நிலையில், டெல்லியில் உள்ள குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் சி.பி.ராதாகிருஷ்ணனை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் அதிமுக எம்.பிக்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம், இன்பதுரை, தனபால் ஆகியோர் உடனிருந்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *