
மதுரை: திமுகவில் ஜனநாயகம் இல்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். மதுரை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி பூத் கமிட்டி மாநாடு மதுரை அண்ணாநகரில் நேற்று நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவர் மாரி சக்கரவர்த்தி தலைமைவகித்தார். பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கபெருமாள் முன்னிலை வகித்தார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் செய்வது அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் சேர்ந்து முடிவெடுக்கின்றனர். ஆனால் ஜிஎஸ்டி வரி விதிப்பை மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு செய்வதாக தமிழக அரசு குறைகூறி வருகிறது.