
சென்னை: தேர்தலின்போது, மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிகளை எளிதில் அணுகுவதற்கான வசதிகளை செய்து கொடுப்பது தொடர்பான சட்டவிதிகளை கண்டிப்பாக பின்பற்றுவதை உறுதிசெய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின்போது, மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிகளை எளிதில் அணுகுவதற்கான வசதிகளை செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என மாற்றுத் திறனாளிகள் அமைப்பு ஆய்வு செய்தபோது, இந்த விதிகள் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என தெரியவந்துள்ளதாகக் கூறி, மாற்றுத் திறனாளியான வைஷ்ணவி ஜெயகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.