
புதுடெல்லி: வக்பு சட்ட திருத்தத்துக்கு முழுவதுமாக இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசி அமர்வு விசாரித்து இடைக்கால தீர்ப்பை வழங்கி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.
முகாந்திரம் எழவில்லை: இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று அளித்த இடைக்கால தீர்ப்பில் கூறியிருப்பதாவது: ஒட்டு மொத்த வக்பு சட்ட திருத்தத்துக்கும் தடை விதிக்கும் முகாந்திரம் எழவில்லை. இருப்பினும் சில விதிகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டிய அவசியம் உள்ளது.