• September 16, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அடுத்த மாதம் தீபாவளி பண்​டிகை ​கொண்​டாடப்​பட​வுள்ள நிலை​யில்​, சென்​னை​யில் இருந்து சொந்த ஊர்​களுக்கு செல்​லும் பயணி​களின் வசதிக்​காக, சிறப்பு ரயில்​களை முன்​ன​தாகவே அறிவிக்க பயணி​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

இந்த ஆண்டு தீபாவளி பண்​டிகை அக். 20-ம் தேதி கொண்​டாடப்​படு​கிறது. ரயில் டிக்​கெட்​டைப் பொருத்​தவரை 60 நாட்​களுக்கு முன்பே முன்​ப​திவு செய்​யும் வசதி உள்​ளது. அதன்​படி, தீபாவளி பண்​டிகைக்​கான டிக்​கெட் முன்​ப​திவு கடந்த ஆக.17 முதல் 20-ம் தேதி வரை நடை​பெற்​றது. தென் மாவட்​டங்​களுக்கு புறப்​படும் நெல்​லை, கன்​னி​யாகுமரி, பாண்​டியன், பொதி​கை, முத்​துநகர் உள்ளிட்ட முக்​கிய ரயில்​களில் 2-ம் வகுப்பு தூங்​கும் வசதி பெட்​டிகளில் டிக்கெட்டுகள் சில நிமிடங்​களில் விற்று தீர்ந்​தன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *