
தஞ்சாவூரில் இன்று (செப்டம்பர் 16) அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவரான டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசி வருகிறார்.
அப்போது, “பழனிசாமி ஆட்சியைக் காப்பாற்றியது பாஜக அல்ல. அதிமுக எம்.எல்.ஏ க்கள் தான். பழனிசாமி நம்பகத்தன்மையற்ற மனிதர் என எல்லோருக்கும் தெரியும். பழனிசாமி படுபாதாளத்துக்குத் தள்ளப்படுவார்.
அதிமுக தோற்றால் நான் காரணம் அல்ல. தன்மானம்தான் முக்கியம் என்று சொல்லும் பழனிச்சாமி டெல்லி சென்றது ஏன்?” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார்.