
சென்னை: தனியார் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதாகி ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ள தேவநாதன் யாதவ் தனது சொந்தப் பணம் ரூ.100 கோடியை விசாரணை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன், அவருக்கு அக்.30 வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘தி மயிலாப்பூர் இந்து பர்மனென்ட் ஃபண்ட் லிமிடெட்’ நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த100-க்கும் மேற்பட்டோரிடம் பல நூறு கோடி மோசடி செய்ததாக அதன் நிர்வாக இயக்குநர் தேவநாதன் யாதவ் மற்றும் இயக்குநர்கள் என 6 பேரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2024 ஆகஸ்டில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.