• September 16, 2025
  • NewsEditor
  • 0

பாட்னா: பிஹாரில் ரூ.36,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். பிஹாரின் பூர்ணியா நகரில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டு உள்ளது. இந்த புதிய விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். அங்குள்ள எஸ்எஸ்பி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ரூ.36,000 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். ஒரு வந்தே பாரத் ரயில், 3 அம்ரித் பாரத் ரயில்களின் சேவையை அவர் தொடங்கி வைத்தார்.

விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: கடந்த 11 ஆண்டுகளில் 4 கோடி ஏழை குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளன. புதிதாக 3 கோடி வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. கடந்த கால ஆட்சியில் பிஹாரின் பூர்ணியா, சீமாஞ்சல் பகுதிகள் பின்தங்கிய நிலையில் இருந்தன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *