
நாக்பூர்: மத்திய அரசு எத்தனால் கலந்த பெட்ரோலை (E20) விற்பனை செய்வதற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதனால், கச்சா எண்ணெய் இறக்குமதி குறையும் என்பதுடன் கார்பன் வெளியேற்றத்தை குறைக்கவும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், கரும்பு மற்றும் மக்காச்சோளத்தை பயிரிடும் விவசாயிகளுக்கு எத்தனால் கலப்பு மூலம் அதிக வருவாய் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், எத்தனால் கலப்பால் மைலேஜ் மற்றும் வாகனங்கள் பாதிக்கப்படுவதாக பல்வேறு விமர்சனங்களை மோட்டார் வாகன துறை நிபுணர்கள் முன்வைக்கின்றனர். குறிப்பாக, நிதின் கட்கரியின் மகன்கள் நடத்தி வரும் இரண்டு முன்னணி எத்தனால் நிறுவனங்கள் பயன்பெறவே இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக நிதின் கட்கரி மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.