
சென்னை: ஆளுமைகள் வழிநடத்திய புரட்சிகர இயக்கத்தில் மாபெரும் பொறுப்பை ஏற்பதாகவும், தன்னை வாழ்த்தியவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக பொறுப்பேற்றுள்ள மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக, மு.வீரபாண்டியன் கடந்த செப்.13-ம் தேதி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு முதல்வர் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.