
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நாளை (செப்.16) டெல்லி செல்கிறார். குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவிக்க செல்வதாக அதிமுக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி வியூகங்கள் குறித்து ஆலோசித்து வருகின்றன. அதிமுகவில் ஒன்றிணைப்பு குரலை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எழுப்பியுள்ளார். அதனால் அவரது கட்சி பொறுப்பும், ஆதரவாளர்களின் கட்சி பொறுப்புகளும் பறிக்கப்பட்டுள்ளன.