
சென்னை: “அரசியல் என்பது மக்கள் பணி. அது கடுமையான பணி. எங்களைப் பொறுத்தவரைக்கும், இங்கே சொகுசுக்கு இடமில்லை” என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாக்கும் வகையில், 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர, அவர்களுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது, “இனிமேல், நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களை இன்னும் கவனித்துக் கொள்ளத்தான் இந்த அன்புக் கரங்கள் திட்டத்தைத் தொடங்கி இருக்கிறோம். நான் இருக்கிறேன்… உங்களை பத்திரமாக பார்த்துக் கொள்வேன்.