
சென்னை: வட சென்னை மற்றும் அதை ஒட்டிய திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் நேற்று அதிகாலை விடிய விடிய பலத்த இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை, புறநகரில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் நிலவி வந்தது. இரவு நேரங்களில் கடும் புழுக்கம் நிலவியது. நேற்று முன்தினமும் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை நேரத்தில் லேசான தூரல் நிலவியது.
பின்னர் மாலை, இரவில் புழுக்கமான சூழல் நிலவியது. இந்நிலையில், நேற்று அதிகாலை பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. காலை 6 மணிக்கு மேலும் மழை நீடித்தது. இதனால் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் தேங்கியது.