
சென்னை: மாநிலத்துக்குள் மின்சார வர்த்தகம் மேற்கொள்ள தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்துக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். காற்று, நீர், சூரிய ஆற்றல் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் வளர்ச்சி மற்றும் செயல்படுத்தலை நெறிப்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் உருவாக்கப்பட்டது.
தமிழகத்தின் மின்சார உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்கை 2030-ம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக உயர்த்துவதும், புதுப்பிக்கத்தக்க கொள்முதல் இலக்கை அடைவதும் பசுமை எரிசக்தி கழகத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று.