
கோவை: நடிகர் அஜித் வந்தாலும் கூட்டம் வரத்தான் செய்யும். கூட்டத்தை பார்க்காமல் கொள்கையை பார்க்க வேண்டும் என, நடிகர் விஜய் செயல்பாடுகள் குறித்து சீமான் கருத்து தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: இளையராஜாவிற்கு முதலில் நான் தான் பாராட்டு விழா எடுப்பதாக இருந்தது. அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் போது இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என விட்டு விட்டேன்.