
திருச்சி: திருச்சியில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது, நிபந்தனைகளை மீறியதாக திருச்சி தவெக நிர்வாகிகள் 5 பேர் மீது 3 காவல் நிலையங்களில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தவெக தலைவர் விஜய் திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் நேற்று முன்தினம் பிரச்சாரத்தை தொடங்கினார். இதற்காக திருச்சி மாநகர போலீஸார் 23 நிபந்தனைகளை விதித்து, பிரச்சாரத்துக்கு அனுமதி அளித்திருந்தனர்.