• September 15, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: திமுக அரசை கண்​டித்து மண்டல வாரி​யாக ஆர்ப்​பாட்​டம் நடத்​தப்​படும் என தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் அறிவித்துள்​ளார். சென்​னை, கவிக்கோ அரங்​கில் தமாகா சார்​பில் மாநில அளவி​லான பேச்​சாளர்​கள் பயிற்சி முகாம் கட்​சித் தலை​வர் ஜி.கே.​வாசன் தலை​மை​யில் நடை​பெற்​றது.

இதில், மாவட்ட அளவில் தேர்வு செய்​யப்​பட்ட பேச்​சாளர்​கள் சுமார் 60 பேர் கலந்து கொண்டு பேசினர். விழா​வில் பேச்​சாளர்​களுக்கு சான்​றிதழ் வழங்கி ஜி.கே.​வாசன் பேசி​ய​தாவது: தமா​கா​வின் கொள்கை முழக்​கங்​களை பேச்​சாளர்​கள் பிரச்​சா​ர​மாக முன்​னெடுக்க வேண்​டும். குறிப்​பாக திமுக அரசின் மக்​கள் விரோத போக்​கை, தமா​கா​ கட்சியின் சிறப்​பை, மறைந்த தலை​வர்​கள் ஜி.கே.மூப்​ப​னார், காம​ராஜர் ஆகியோ​ருடைய நல்ல சிந்​தனை​களை மக்​கள் மத்​தி​யில் கொண்டு செல்ல வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *