
சென்னை: சென்னையில் தடுப்பூசி செலுத்திய நிலையில் 40 நாட்களுக்குப் பிறகு ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முகமது நஸ்ருதீன் (50). இவர் ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார்.
கடந்த ஜூலை 28-ம் தேதி பெசன்ட் சாலையில் உள்ள மீர்சாகிப்பேட்டை மார்க்கெட்டுக்கு அருகே இருக்கும் ஆட்டோ ஸ்டேண்டில், ஆட்டோவை எடுப்பதற்காக அதில் ஏற முயன்றார். அப்போது ஆட்டோவுக்கு கீழே படுத்திருந்த தெருநாய் ஒன்று திடீரென முகமது நஸ்ருதீனின் முழங்கால் பகுதியில் கடித்தது.