
பானுமதி ராமகிருஷ்ணா மிகச்சிறந்த நடிகையாக, இயக்குநராக, பாடகியாக, வசனகர்த்தாவாக, படத்தயாரிப்பாளராக பன்முக ஆற்றல் கொண்ட ஆளுமையாக, தென்னிந்திய திரை உலகில் முத்திரை பதித்தவர்.
ஆனாலும் அவர் மிகச்சிறந்த நகைச்சுவை எழுத்தாளர் என்பது வெகுசிலரே அறிந்த செய்தி. நடிப்பதை விட எழுதுவதுதான் அவருக்குப் பிடித்தமானது. இதை அவரே சொல்லி இருக்கிறார். “படப்பிடிப்பு இடைவேளைகளில் எனக்கும் என் மாமியாருக்கும் நடந்த வேடிக்கையான சின்னச் சின்ன சண்டைகளை பேனா சித்திரங்களாக டைரி பூராவும் எழுதி வைத்திருந்தேன்.