• September 15, 2025
  • NewsEditor
  • 0

கிணத்துக்கடவு: பொள்​ளாச்சி கிணத்​துக்​கடவை சேர்ந்த பெண்​ணின் மகளிர் உரிமைத்​தொகை, உத்தர பிரதேசத்​தில் வசிக்​கும் பெண்​ணின் வங்​கிக் கணக்​குக்கு 2 ஆண்​டு​களாக அனுப்​பப்​பட்​டது சர்ச்​சையை ஏற்​படுத்தி உள்​ளது. கோவை மாவட்​டம் கிணத்​துக்​கடவு கொண்​டம்​பட்​டியைச் சேர்ந்​தவர் மகேஸ்​வரி (50). இவர் 2 ஆண்​டு​களுக்கு முன்பு தமிழக அரசின் மகளிர் உரிமைத்​தொகை பெற விண்​ணப்​பித்​தார். விண்​ணப்​பம் ஏற்​றுக்​கொள்​ளப்​பட்​டதற்​கான எந்த குறுஞ்​செய்​தி​யும் வராத​தால், விண்​ணப்​பம் நிராகரிக்​கப்​பட்​ட​தாக கரு​தி​யுள்​ளார்.

இந்​நிலை​யில், கிணத்​துக்​கடவு ஒன்​றி​யத்​தில் ஜூலை 25-ம் தேதி நடந்த ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ முகாமில் மீண்​டும் மகளிர் உரிமைத்​தொகை கோரி விண்​ணப்​பித்​துள்​ளார். மனுவை ஆய்வு செய்த அதி​காரி​கள், “உங்​களுக்கு 2 ஆண்​டு​களாக மகளிர் உரிமைத்​தொகை வழங்​கப்​படு​கிறது. வங்​கிக் கணக்கை சரி​பாருங்​கள்” எனக் கூறினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *