
சென்னை: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி இரண்டு மடங்கு அதிகம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை, எலியட்ஸ் கடற்கரையில், அரசு மனநல மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட “உலக தற்கொலை தடுப்பு வாரம்” நிகழ்ச்சியில் தலைமை தாங்கி தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்று, விழிப்புணர்வு உரையாற்றி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரம் விநியோகித்து, விழிப்புணர்வு பதாகை ஏந்தி மனித சங்கிலி நிகழ்வில் பங்கேற்றார்.