
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 11வது ஊராட்சி ஒன்றியமாக அஞ்செட்டியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் நடந்த அரசு விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.270 கோடியே 75 லட்சம் மதிப்பிலான 193 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். ரூ.562 கோடியே 14 லட்சம் மதிப்பிலான 1,114 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதே போல பல்வேறு துறைகளின் சார்பில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 13 பயனாளிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 52 கோடியே 3 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.