
கவுகாத்தி: அசாமின் உடல்குரியில் இன்று மாலை 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.41 மணியளவில் உடல்குரியில் 5.8 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையம் உடல்குரி மாவட்டத்தின் மையப்பகுதியில் இருந்தது. நிலநடுக்கத்தின் ஆழம் 5 கி.மீ ஆக இருந்தது” என தெரிவித்துள்ளது.