
சாத்தூர்: கூட்டணி ஆட்சி என்கிற விஜயின் கருத்தை புதிய தமிழகம் கட்சி வரவேற்கிறது என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் கோயில் நிர்வாகத்தை கண்டித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் வருகிற செப்.24ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் குறித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் இருக்கன்குடி ஊர் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் சாத்தூரில் உள்ள தனியார் விடுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது.