
சென்னை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில் வாத்தியங்கள் இசைக்க கூடாது என்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத செயலாகும். தமிழர்களின் பாரம்பரிய இசையையும் கலைகளையும் அழிக்க நினைக்கும் செயலை உடனடியாக கைவிட வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை நகரின் முக்கிய பகுதியான வட மதுரையில் மிகவும் பழமை வாய்ந்த விருந்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. அடியார்களுக்கு சிவபெருமான் விருந்தளித்த புனித தலமாக இது கருதப்படுவதால் விருந்தீஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கோவிலில் பூஜை நடைபெறும் வேலைகளில் ஆரம்ப காலம் முதலே சிவ வாத்தியம், கைலாய வாத்தியம் போன்றவை இசைக்கப்படுவது மரபு ஆகும்.