
வீட்டில் டிவி பார்க்க வந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கடலூர் மாவட்ட இளைஞருக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டுகள் சிறை தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது வீட்டுக்கு டிவி பார்க்க வந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்துள்ளதாகக் கூறி குற்றம் சாட்டப்பட்டது. அதையடுத்து இது தொடர்பான வழக்கை விசாரி்த்த கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் அந்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து கடந்த 2021-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட இளைஞர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.