• September 14, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: உயர்கல்வித்துறையை சீரழித்தது தான் திமுக அரசின் சாதனை என்றும் தமிழ்நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களைக் காப்பாற்ற வேண்டுமானால் திமுக அரசை அகற்றி விட்டு, உயர்கல்வி மீது அக்கறை கொண்ட அரசை அமைக்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஜூன் மாதம் நிறைவடைய வேண்டிய மாணவர் சேர்க்கை செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருக்கும் போதிலும், நான்கில் ஒரு பங்கு இடங்கள் நிரம்பாமல் காலியாக கிடக்கின்றன. தனியார் கல்லூரிகளில் போட்டிப் போட்டுக் கொண்டு சேரும் மாணவர்கள், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *