
சென்னை: பெரம்பலூர் வர இயலாததற்கு வருத்தம் தெரிவித்துள்ள தவெக தலைவர் விஜய், இன்னொரு நாள் நிச்சயம் வருவதாக உறுதி அளித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்கான அறிவிப்பை வெளியட்டிருந்த விஜய், முதல் கட்டமாக நேற்று திருச்சியில் தனது சுற்றுப் பயணத்தை தொடங்கினார். நேற்று அரியலூர், குன்னம், பெரம்பலூர் நகரங்களில் நேற்று அவர் பிரச்சாரத்துக்குச் செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், அதிக அளவில் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கூடியதால் பெரம்பலூர் பயணம் கைவிடப்பட்டது.