
“கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது. அதை வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது” என இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் மீண்டும் விவாதப் பொருளாகி இருக்கும் நிலையில், டெல்லி வந்திருந்த இலங்கையின் பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் துறையின் துணை அமைச்சரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சுந்தரலிங்கம் பிரதீப்பை ‘இந்து தமிழ் திசை’க்காக சந்தித்துப் பேசினோம்.
இந்திய வம்சாவளி அமைச்சர்களில் மூவரில் ஒருவரான நீங்கள் மலையகத் தமிழர்களுக்காக சாதித்ததைக் கூற முடியுமா?