
திருச்சியில் நேற்று பிரச்சாரம் செய்வதற்காக தவெக தலைவர் விஜய் வந்த போது, காவல் துறை விதித்த நிபந்தனைகளை அவரது தொண்டர்கள், ரசிகர்கள் காற்றில் பறக்கவிட்டனர். இதனால், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
திருச்சி மரக்கடை பகுதியில் தவெக தலைவர் விஜய் நேற்று பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரத்தின்போது, விஜய்யின் வாகனத்திற்கு பின்னால் 5 வாகனங்களுக்கு மேல் அனுமதிக்கப்படாது. விஜய் வாகனத்தின் முன்னும் பின்னும் தொண்டர்கள் பைக், 4 சக்கர வாகனங்களில் ஊர்வலமாக வரக்கூடாது.