
ஆவடி பேருந்து முனையத்தை நவீனப்படுத்தி புதிய பேருந்து முனையமாக மாற்றும் பணி தொடங்கியுள்ளதால், இங்கிருந்த பேருந்து முனையம் செப்.14-ம் தேதி (இன்று) முதல், 100 மீட்டர் தொலைவில் இடமாற்றம் செய்யப்படுகிறது.
இது குறித்து, சென்னை மாநகர் போக்குவரத்து கழக இணை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும (சிஎம்டிஏ) திட்டத்தின் கீழ், ஆவடி பேருந்து முனையத்தை நவீனப்படுத்தி, புதிய பேருந்து முனையமாக மாற்றி அமைக்க கட்டுமானப் பணிகள் தொடங்கி, நடைபெற்று வருகின்றன.