
மலையடிவார கிராமமான காளகம்மாபட்டியில், ஒற்றுமையாய் வாழ்ந்த மக்கள், காலப்போக்கில் வேற்றுமைகளை வளர்த்துக்கொண்டு, காளப்பட்டி, கம்மாபட்டி எனப் பிரிந்துவிடுகிறார்கள்.
அவர்களை ஒன்றுசேர்க்கப் போராடுகிறான் கதிர் (காளி வெங்கட்). அவனுடைய உயிர் நண்பன் மணி (அர்ஜுன் தாஸ்), இந்த ஊர்களை விட்டே போய்விடலாம் என்கிறான். மறுக்கும் கதிர், ஒரு நாள் இறந்துவிட, ஒரு கட்டத்தில், ஊரின் பூசாரி, ‘கதிர்தான் நம்ம குலசாமி’ என்கிறார். ‘பிரிந்தவர்கள் ஒன்றிணைந்து அவருக்கு இறுதிச் சடங்கு செய்தால் ஊருக்கு விடியல் பிறக்கும்’ என்கிறார். அதை இரு தரப்பும் ஏற்றார்களா? ஊரை ஒன்றிணைக்கும் மணி எடுத்த முயற்சிகள் வெற்றி பெற்றதா என்பது கதை.