• September 14, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: உங்​களு​டன் ஸ்டா​லின் திட்​டத்​தில் மக்​கள் அளிக்​கும் அனைத்து மனுக்​கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று அதி​காரி​களுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

சென்னை தலை​மைச் செயல​கத்​தில் நேற்று காலை, உங்​களு​டன் ஸ்டா​லின் திட்​டத்​தின் செயல்​பாடு​கள் குறித்​தும், முகாமில் பெறப்​பட்ட மனுக்​கள் மீது எடுக்​கப்​பட்டு வரும் நடவடிக்​கைகள் குறித்​தும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் ஆய்​வுக் கூட்​டம் நடை​பெற்​றது. கூட்​டத்​தில் உங்​களு​டன் ஸ்டா​லின் திட்​டத்​தின்​கீழ் துறை வாரி​யாக பெறப்​பட்ட மனுக்​கள், அதன் மீதான தீர்வு மற்​றும் நிலுவை விவரங்​கள் குறித்து அலு​வலர்​களிடம் முதல்​வர் ஸ்டா​லின் கேட்​டறிந்​தார். மேலும், பெறப்​பட்ட மனுக்​களை ஆய்​வுசெய்​து, உரிய கால கட்​டத்​துக்​குள் தீர்வு காணப்​படு​வதை கண்​காணிக்​க​வும் துறை செயலர்​களுக்கு அறிவறுத்​தி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *