
சென்னை: தமிழக அரசு சார்பில் சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில், இசைஞானி இளையராஜாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
கடந்த 1975-ம் ஆண்டு தொடங்கிய இளையராஜாவின் இசைப்பயணம் இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தி சாதனை படைத்துள்ளார். அவரது சாதனைகளை பாராட்டி, அவரை கவுரவிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் ‘சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டு-50 பாராட்டு விழா’ சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. விழாவில், இளையராஜாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், நினைவுப் பரிசு வழங்கினார்.