
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு.வீரபாண்டியன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பொருத்தவரை மாநிலச் செயலாளர் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு செய்யப்படுவார். 2015-ல் மாநிலச் செயலாளராக இரா.முத்தரசன் தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகும் தொடர்ந்து 2 முறை மாநிலச் செயலாளராக அவரே தேர்வு செய்யப்பட்டு, மொத்தம்
9 ஆண்டுகள் பணியாற்றினார்.