• September 13, 2025
  • NewsEditor
  • 0

அரியலூர்: ‘பாஜக செய்வது துரோகம்; திமுக செய்வது நம்பிக்கை மோசடி’ என மத்திய மற்றும் மாநில அரசை அரியலூரில் பிரச்சாரம் மேற்கொண்டபோது தவெக தலைவர் விஜய் சாடினார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது முதல் பிரச்சாரப் பயணத்தை திருச்சியில் சனிக்கிழமை காலை தொடங்கினார். திருச்சியில் மதியம் 3 மணி அளவில் விஜய் பேசினார். மைக்கில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவரது உரையை முறையாக கேட்க முடியாத சூழல் ஏற்பட்டது. இருப்பினும் தனது உரையை முடித்துக் கொண்டு திருச்சியில் இருந்து அரியலூர் புறப்பட்டார். சனிக்கிழமை இரவு 8.45 மணி அளவில் அவரது பிரச்சார வாகனம் அரியலூர் வந்தடைந்தது. அரியலூரில் உள்ள அண்ணா சிலை முன்பு திரண்டிருந்த தவெக தொண்டர்கள் மற்றும் மக்கள் மத்தியில் விஜய் பேசினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *