
ஐஸ்வால்: வடகிழக்கு மாநிலமான மிசோரம் தலைநகர் ஐஸ்வாலை இணைக்கும் பைரபி – சாய்ரங் வரையிலான 51.38 கிமீ தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனை காணொளி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்.13) நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
வடகிழக்கு மாநிலங்களான மிசோரம், மணிப்பூர், அசாம் மற்றும் மேற்கு வங்கம், பிஹார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பிரதமர் மோடி மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் ரூ.9,000 கோடி மதிப்புள்ள நிறைவடைந்த திட்டங்களை தொடங்கிவைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கலிட்டு தொடங்கி வைத்தார்.