
புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் வரிவிதிப்பால் இந்தியா பாதிக்கப்பட்டிருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பான (கிரெடாய்) சார்பில் சிங்கப்பூரில் கடந்த 11-ம் தேதி சிறப்பு கண்காட்சி தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.
அங்கு அவர் கூறியதாவது: இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அரசு 50 சதவீத வரிவிதிப்பை அமல்படுத்தி உள்ளது. இதனால் இந்தியாவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. ஏராளமானோர் வேலை இழந்து உள்ளனர். குறிப்பாக குஜராத்தின் சூரத் நகரில் வைரம், தங்க நகை தொழிலில் ஈடுபட்டிருந்த 1.35 லட்சம் பேர் வேலை இழந்து உள்ளனர். இதேபோல மீன் ஏற்றுமதி, உற்பத்தித் துறை சார்ந்த தொழிலாளர்களும் வேலை இழந்து உள்ளனர்.