• September 13, 2025
  • NewsEditor
  • 0

கர்நாடகாவில் விநாயகர் ஊர்வலத்தில் பக்தர்கள் மீது லாரி மோதியதில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று (செப்டம்பர்.12) இரவு லாரி ஒன்று விநாயகர் ஊர்வலத்திற்குள் புகுந்தது.

கர்நாடகவில் கோர விபத்து

ஒரு பைக் மீது மோதுவதைத் தவிர்க்க முயன்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து மக்கள் மீது மோதிய சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 25-க்கும் மேற்பட்டோர் கடுமையாக காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் சிலரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 சித்தராமையா
சித்தராமையா

விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 ரூபாய் லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் சித்தராமையா அறிவித்த்துள்ளார்.

விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *