• September 13, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஐ.டி. துறை​யில் உலகம் முழு​வ​தி​லும் தமிழர்​களின் பங்​களிப்பு அதி​கரித்து வரு​கிறது என்று தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜன் தெரி​வித்​தார். சர்​வ​தேச தமிழ் பொறி​யாளர்​கள் சங்​கத்​தின் முதல் மாநாடு மற்​றும் கண்​காட்சி சென்​னை வர்த்தக மையத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதன் தொடக்க விழா​வில் தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜன், போக்​கு​வரத்து துறை அமைச்​சர் சிவசங்​கர் ஆகியோர் சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்​று, மாநாட்டை தொடங்கி வைத்​தனர்.

இந்த நிகழ்​வில் மூத்த விஞ்​ஞானி ஏ.சிவ​தாணுப் பிள்​ளை, இஸ்ரோ முன்​னாள் விஞ்​ஞானி மயில்​சாமி அண்​ணாதுரை உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர். விழா​வில் அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜன் பேசி​ய​தாவது: தமிழர்​களின் ரத்​தத்​தில் பொறி​யியல் ஊறியுள்​ளது. பல நூறு ஆண்​டு​களுக்கு முன்பு தமிழர்​களால் கட்​டப்​பட்ட துறை​முகங்​களே இதற்கு சான்​று. உலகம் முழு​வதும் உள்ள வர்த்தக மையங்​களு​டன் தமிழர்​கள் பன்​னெடுங்​கால​மாக பங்​கு​தா​ரர்​களாக இருந்​துள்​ளனர். இதற்​கான சான்​றாக, கீழடியில் ரோமானிய காசுகள் கண்​டெடுக்​கப்​பட்​டுள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *