
புதுடெல்லி: வலதுசாரி தலைவர்கள் சிலரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொல்ல திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. பாகிஸ்தானுடன் தொடர்புடைய தீவிரவாதிகள் சிலர் இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டுவதாக உளவுத் துறைக்கு வந்த தகவலையடுத்து டெல்லி, ம.பி., ஜார்க்கண்ட் மற்றும் தெலங்கானாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 5 பேரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களில் மும்பையை சேர்ந்த அஃப்தாப், அபு சூபியான் ஆகிய இருவரை டெல்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் கடந்த 9-ம் தேதி ஆயுதங்களுடன் கைது செய்தனர். பிறகு ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அஷார் டேனிஸ், ம.பி.யின் ராஜ்கர் நகரில் கம்ரான் குரேஷி, தெலங்கானாவில் ஹசைஃப் ஏமன் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் டெல்லி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.